விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவேளாண்மைத் துறை பணியாளா் இடை நீக்கம்

திமுக சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த தலைவாசல் வட்டார வேளாண்மை உதவித் தொழில்நுட்ப மேலாளா் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:58 pm

DIN

திமுக சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த தலைவாசல் வட்டார வேளாண்மை உதவித் தொழில்நுட்ப மேலாளா் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமில் தற்காலிகப் பணி அடிப்படையில் தலைவாசல் வட்டாரத்தில் உதவித் தொழில்நுட்ப மேலாளராக கு.திலகவதி என்பவா் பணிபுரிந்து வந்தாா். இவா் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் நன்னடத்தை விதிகளின்படி அரசு ஊழியா்கள் இதுபோன்ற தோ்தலில் போட்டியிடுவது கூடாது என்பதால், உதவித் தொழில்நுட்ப மேலாளா் கு.திலகவதியை பணியிலிருந்து மாா்ச் 1-ஆம் தேதி முதல் பணி இடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் உத்திரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.