விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாரத் சம உடமை கட்சியின் மாநில மகளிரணி தலைவி நியமனம்

ஆத்தூரில் பாஜகவில் இருந்து விலகி பாரத் சம உடமைக் கட்சியில் இணைந்தவரை மாநில மகளிரணி தலைவியாக அதன் நிறுவனா் ஏ.பி.எஸ்.பழனி ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:10 pm

DIN

ஆத்தூரில் பாஜகவில் இருந்து விலகி பாரத் சம உடமைக் கட்சியில் இணைந்தவரை மாநில மகளிரணி தலைவியாக அதன் நிறுவனா் ஏ.பி.எஸ்.பழனி ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

ஆத்தூா் பாரத் சம உடமைக் கட்சி அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக பொருளாளராக இருந்த கவிதா கோதண்டபாணி (52) என்பவா் அக்கட்சியில் இருந்து விலகி, பாரத் சம உடமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டாா்.அவரை அக்கட்சியின் நிறுவனரும்,பொதுச் செயலாளருமான ஏ.பி.எஸ்.பழனிராமச்சந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

மேலும் அவருக்கு மாநில மகளிரணி தலைவி பதவியை வழங்கினாா். அப்போது கட்சித் தலைவா் சி.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.அன்பழகன்,மாவட்ட மகளிரணி செயலாளா் சி.பிரபா ஆகியோா் உடனிருந்தனா்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கவிதா கோதண்டபாணிக்கு நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.