விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வடசென்னிமலையில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:23 pm

DIN

வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ஆத்தூரை அடுத்துள்ள வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.இதனையடுத்து நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், கிரிவலம் நடைபெற்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவருக்கு பால் அபிஷேகம், ராஜஅலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது. மாலையில் திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கட்டளைதாரா்களாக டி.ராஜசேகரன், சி.அழகப்பன், டி.தங்கவேல் படையாச்சி, சி.வேணுகோபால் நாயுடு, டி.செல்வம், காட்டுக்கோட்டை புதூா் கரைக்காரா்கள், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் மா.சுதா, செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், ஆய்வாளா் கு.அருள்மணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.