நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வாழப்பாடி அருகே தார் காய்ச்சும் பாய்லர் வெடித்து கூலித் தொழிலாளி பலி

வாழப்பாடி அருகே தனியார் வீட்டுமனை விற்பனை நிலத்தில் சாலை அமைக்க தார் காய்ச்சும்போது பாய்லர் வெடித்து சிதறியதில் கூலித் தொழிலாளி இறந்தார்.

News image
Updated On :9 அக்டோபர் 2021, 4:20 pm IST

வாழப்பாடி அருகே தனியார் வீட்டுமனை விற்பனை நிலத்தில் சாலை அமைக்க தார் காய்ச்சும்போது பாய்லர் வெடித்து சிதறியதில் கூலித் தொழிலாளி இறந்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பஞ்சுகாளிப்பட்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பூபதி (35). இவருக்கு மணிமேகலை (32) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். வாழப்பாடி அருகிலுள்ள முத்தம்பட்டி மைக்ரோ பேருந்து நிறுத்தம் அருகே, சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் வீட்டு மனைகள் அமைத்துள்ளனர். 

இங்கு தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலை தார் சாலை போடும் பணி தொடங்கியபோது, தாரை காய்ச்சும்  பாய்லர் திடீரென வெடித்தது. இந்த எதிர்பாராத விபத்தில் பூபதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து பூபதியின் மனைவி மணிமேகலை வாழப்பாடி போலீஸில் புகார் தெரிவித்தார்.

இவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி கவனக்குறைவாக இருந்து, கூலித் தொழிலாளியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த, சேலம் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்  சுப்பிரமணியன் (44) சேலம் போடிநாயக்கன்பட்டி சேர்ந்த மேற்பார்வையாளர் சதீஷ் (30), வீட்டுமனை நில உரிமையாளர் சஞ்சய் (32) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.