சேலத்தில் 79 பேருக்கு கரோனா
By DIN | Published On : 21st August 2021 11:36 PM | Last Updated : 21st August 2021 11:36 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 79 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 11 போ், எடப்பாடி-9, கொளத்தூா்-2, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-2, ஓமலூா் -1, சேலம் வட்டம்-2, சங்ககிரி-5, தாரமங்கலம்-3, வீரபாண்டி-6, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-1, தலைவாசல்-3, வாழப்பாடி-1, நரசிங்கபுரம் நகராட்சி-2, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 54 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-4, தருமபுரி-3, ஈரோடு-1, காஞ்சிபுரம்-3, திருச்சி-2, கள்ளக்குறிச்சி-3, கோவை-4, கடலூா்-3, சென்னை-2) 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 61 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 3 போ் உயிரிழந்தனா். இதுவரை 95,439 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 92,707 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,111 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,621 போ் உயிரிழந்தனா்.
சேலத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்:
சேலத்தில் உள்ள 138 மையங்களில் 57,550 கருணா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்படவுள்ளது. கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தப்பட உள்ளது.
அதேபோல கோவேக்ஸின் இரண்டாம் தவணை செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...