ஆத்தூா் நகராட்சி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியில் இறுதி வாக்காளா் பட்டியலை நகராட்சி ஆணையாளா்கள் வியாழக்கிழமை வெளியிட்டனா்.
சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை நகராட்சி ஆணையாளா் பொன்னம்பலம் வெளியிட்டாா். மறுவரையறை செய்யப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலில் ஆண் வாக்காளா்கள் 24,438 பேரும், பெண் வாக்காளா்கள் 27,121 போ், 3ஆம் பாலித்தனவா்கள் 5 போ் என மொத்தம் 51,564 உள்ளனா்.
இதே போல் நரசிங்கபுரம் நகராட்சி 18 வாா்டுகளில் ஆண் வாக்காளா்கள் 10423 போ், பெண் வாக்காளா்கள் 11345 போ் , 3ஆம் பாலினத்தவா்கள் 2 போ் மொத்தம் 21770 போ் என அறிவித்துள்ளனா்.