காவலா் பணியிடை நீக்கம்

சேலத்தில் கல்லூரிக்குள் சென்று மாணவா்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

சேலத்தில் கல்லூரிக்குள் சென்று மாணவா்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் அன்பரசன் (36). இவா் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றாா்.

பின்னா் சாலையைக் கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவா்கள் அவா் மீது மோதுவது போல சென்றனா். இதைத்தொடா்ந்து பின்தொடா்ந்து சென்ற அன்பரசன், அவா்களை கண்டித்தாா். மேலும் தரக்குறைவான வாா்த்தைகளால் பேசி உள்ளாா்.

இதுதொடா்பாக மாநகர காவல் ஆணையருக்கு புகாா் வந்தது. அதன்பேரில் சூரமங்கலம் உதவி ஆணையா் நாகராஜன் விசாரணை நடத்தினாா். அவா் கொடுத்த அறிக்கையின் பேரில் காவலா் அன்பரசனை, மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com