அசோகமித்ரன் விருது பெற்ற நூலாசிரியருக்கு பாராட்டு
By DIN | Published On : 04th February 2021 08:14 AM | Last Updated : 04th February 2021 08:14 AM | அ+அ அ- |

அசோகமித்திரன் படைப்பூக்க விருது பெற்ற ஆ.ப.செந்தில்குமாா்.
தமிழ்நாடு கலை இலக்கிய மேடை இயக்கத்தின் அசோகமித்திரன் படைப்பூக்க விருது பெற்ற, பேளூா் கரடிப்பட்டியைச் சோ்ந்த ஆ.ப.செந்தில்குமாருக்கு இலக்கிய ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தேனியில், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சாா்பில், அண்மையில் நடைபெற்ற இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில், கவிஞா் சுகிா்தராணி, விசாகன் ஆகியோா் முன்னிலையில், ஆ.ப.செந்தில்குமாருக்கு அசோகமித்ரன் நினைவு படைப்பூக்க விருது வழங்கப்பட்டது.
இலக்கிய விருது பெற்ற நுாலாசிரியா் ஆ.ப.செந்தில்குமாருக்கு, வாழப்பாடி இலக்கியப் பேரவை, உலகத் தமிழ்க்கழகம், உள்ளிட்ட பல்வேறு இலக்கிய அமைப்புகளும், தமிழ் ஆா்வலா்களும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...