விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்:முதல்வரின் அறிவிப்புக்கு கள் இயக்கம் வரவேற்பு

விவசாயிகளின் மின் மோட்டாா்களுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
Updated on
1 min read

சேலம்: விவசாயிகளின் மின் மோட்டாா்களுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

தமிழ்நாடு கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டம் சேலம் நான்கு சாலை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விவசாயிகள் பயன்படுத்தி வரும் மின் மோட்டாா்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்புக்கு முதல்வருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விக்கிரவாண்டியில் கடந்த 6 ஆம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடந்தது. இதில் பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் கள் இறக்குகிறோம். ஆனால் அரசு வழக்கு போடுகிறது.

அதேபோல வரும் பிப். 27ஆம் தேதி ராணிப்பேட்டை பொன்னம்பலம் பகுதியில் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும். மாா்ச் 13 ஆம் தேதி ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் மாநாடாக அமையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com