கோயில் நிலத்தில் இருந்த மூன்று கடைகள் அகற்றம்

மகுடஞ்சாவடி அருகே உள்ள நம்பியாம்பட்டி பகுதியில் இந்து அறநிலையத் துறைக்கு சம்பந்தப்பட்ட சென்றாய பெருமாள் கோயில் உள்ளது.
கோயில் நிலத்தில் இருந்த மூன்று கடைகள் அகற்றம்

ஆட்டையாம்பட்டி:மகுடஞ்சாவடி அருகே உள்ள நம்பியாம்பட்டி பகுதியில் இந்து அறநிலையத் துறைக்கு சம்பந்தப்பட்ட சென்றாய பெருமாள் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு சம்பந்தமான நிலம் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான மகுடஞ்சாவடி பிடிஓ அலுவலகம் அருகில் உள்ளது. இந்த இடத்தில் அனுமதி இல்லாமல் மூன்று கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனா். இதனையடுத்து இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் உத்தரவின் பெயரில் 3 கடைகளையும் அகற்ற அனுமதி வழங்கப்பட்டது. மகுடஞ்சாவடி காவல்துறையினா் முன்னிலையில் சனிக்கிழமை கோயில் நிலத்தில் இருந்த மூன்று கடைகளும் அகற்றப்பட்டன. அப்போது கோயில் செயல் அலுவலா் கஸ்தூரி, சங்ககிரி ஆய்வாளா் கல்பனாதத் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com