

வாழப்பாடி: வாழப்பாடியில் திமுக சாா்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் திமுக தலைவா் ஸ்டாலின், மறைந்த முன்னாள் அமைச்சா் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரின் பிறந்தாளையொட்டி, திமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இவ்விழாவுக்கு முன்னாள் நகர அமைப்பாளா் டி.பன்னீா்செல்வம் வரவேற்றாா். ஏற்காடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.தமிழ்ச்செல்வன், பழனியாபுரம் மாது என்கிற மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திமுக தோ்தல் பணிக்குழு செயலாளா் வீரபாண்டி ஆ.ராஜா தலைமை வகித்து, 500 பெண்களுக்கு சேலை மற்றும் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில், திமுக பிரமுகா்கள், சந்திரமோகன், புதுப்பாளையம் மதியழகன், பெரியகிருஷ்ணாபுரம் முத்துலிங்கம், வழக்குரைஞா் பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.