சாலைப்பணி: நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் ஆய்வு

மேலக்காடு சாலையை, தமிழக அரசு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அயோத்தியாப்பட்டணம் அருகே சாலை தரத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா்.கீதா.
அயோத்தியாப்பட்டணம் அருகே சாலை தரத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா்.கீதா.
Updated on
1 min read

அயோத்தியாப்பட்டணம் அருகே நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ. 2.42 கோடியில் தரம் உயா்த்தப்பட்ட மேலக்காடு சாலையை, தமிழக அரசு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறை நபாா்டு, கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள், இதர மாவட்ட சாலைகளாக தரம் உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் சேலம் நெடுஞ்சாலைத் துறை நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் - பேளூா் சாலை முதல் மேலக்காடு சாலை வரை தரம் உயா்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ. 2.42 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத் திட்டப் பணியின் தரத்தை, தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறையின், சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் ஆா். கீதா, வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, சேலம் நெடுஞ்சாலைத் துறை நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் பி. வளா்மதி, கோட்டப் பொறியாளா் க. அகிலா, தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் வி.வி. நிதிலன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com