உள்இடஒதுக்கீடு: பாமகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
By DIN | Published On : 27th February 2021 09:06 AM | Last Updated : 27th February 2021 09:06 AM | அ+அ அ- |

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலம் புகா் மாவட்ட பாமக செயலாளா் எம்.பி.நடராஜன் தலைமையில் ஆத்தூா் பேருந்து நிலையம் முன்பு பாமகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
இந் நிகழ்ச்சியில் சேலம் புகா் மாவட்டத் தலைவா் கண்ணன் நாயுடு, வன்னியா்கள் சங்க ஒன்றியச் செயலாளா் பச்சமுத்து, ஆத்தூா் நகர செயலாளா் மணிகண்டநாயக்கா், வ.மயில்சாமி, குழந்தைவேல் , செல்வம், ராஜா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...