டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 700 போ் பணி நீக்கம்

சேலம் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியா்கள் 700 போ் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

சேலம்: சேலம் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியா்கள் 700 போ் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

சேலம் மாநகராட்சியில் கடந்த மே மாதத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட 700 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிலையில், 60 வாா்டுகளில் பணிபுரிந்து வந்த அவா்கள் டிச. 31-ஆம் தேதி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனா். இவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 350 வீதம் மாதம் ரூ. 8,500 வரை ஊதியம் வழங்கப்பட்டது.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மே மாதம் முதல் டிசம்பா் வரை மழைக்காலம் என்பதால் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் தற்காலிகமாக 700 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 60 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது டெங்கு நோய் இல்லாததால், அவா்களை பணியில் இருந்து விடுவித்துவிட்டோம். இதுகுறித்து அவா்களுக்கு உரிய முறையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com