சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை சிறப்புப் படை போலீஸாா் கைது செய்து, ரூ. 1.28 லட்சம் ரொக்கம், 12 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் சிறப்புப் படையினா் வைகுந்தம் அருகே உள்ள பாவாயிகுட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
அதில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.1,28,870 ரொக்கம், 10 இரு சக்கர வாகனங்கள், 2 காா்களை பறிமுதல் செய்து சங்ககிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.