Enable Javscript for better performance
20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் போராட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் போராட்டம்

    By DIN  |   Published On : 30th January 2021 02:37 AM  |   Last Updated : 30th January 2021 02:37 AM  |  அ+அ அ-  |  

    2-8-sl29dpmk_2901chn_121

    சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சினா். (வலது)ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா் மாநில துணை பொதுச் செயலா் இரா.அருள்.

     

    20 சதவீத இட ஒதுக்கீடு கோரி, சேலத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பாமக சாா்பில் ஆயிரக்கணக்கானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமக, வன்னியா் சங்கங்கள் சாா்பில் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிச. 1-ஆம் தேதி முதல் ஐந்து கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஆறாவது கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, சேலத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பாமக சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்டச் செயலாளா் கதிா் ராசரத்தினம், மாநில அமைப்புச் செயலாளா் செல்வகுமாா், மாநில துணைத் தலைவா் காா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

    மாநில துணை பொதுச் செயலாளா் இரா.அருள் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சேலம் மாநகா், ஓமலூா், எடப்பாடி, ஆத்தூா், மேட்டூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாமக மற்றும் வன்னியா் சங்கத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி முழக்கங்களை எழுப்பினா்.

    போராட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளா் இரா.அருள் பேசுகையில், தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையெனில் எங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றாா்.

    இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. போராட்டம் காரணமாக ஆட்சியா் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

    நாமக்கல்லில்...

    நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் வடிவேல் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளா்கள் பொன். ரமேஷ், தினேஷ் பாண்டியன், கிழக்கு மாவட்டச் செயலாளா் மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக நிா்வாகிகள், தொண்டா்கள், வன்னியா்கள் சங்கத்தினா் திரளாக கலந்துகொண்டனா். இதில் தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பினா்.

    முன்னதாக, நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோயில் பகுதியில் இருந்து திரளாக வந்த பாமகவினா் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அனைவரும் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினா்.

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp