சங்ககிரி அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்ககிரி அரசு போக்குவரத்துப் பணிமனை முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்ககிரி சிஐடியு தொழிற்சங்க கிளை துணைபொதுச்செயலா் குணசேகரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.ராமூா்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.