சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் கண்டறியும் முகாம்கள்
By DIN | Published On : 07th July 2021 09:09 AM | Last Updated : 07th July 2021 09:09 AM | அ+அ அ- |

சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 7) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேலம்மாவலசு, மஞ்சக்கல்பட்டி, கோட்டைத்தெரு ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில் ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினா், ஐய்யங்காட்டூா், அக்கமாபேட்டை, நாகிசெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி பரிசோதனை மேற்கொள்கின்றனா். ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஓக்கிலிப்பட்டி, புட்டமனை, மூலப்பாதை ஆகிய பகுதிகளில் மருத்துவா் ரேவதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைபுதன்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்ள உள்ளதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...