தம்மம்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th July 2021 09:12 AM | Last Updated : 07th July 2021 09:12 AM | அ+அ அ- |

தம்மம்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினா் மணிமாறன் தலைமை வகித்தாா். அரசு போக்குவரத்துக் கழக ( சிஐடியு ) ஆத்தூா் செயலாளா் கலைச்செல்வன், தம்மம்பட்டி சிஐடியு தலைவா் கருணாகரன், சுருட்டு தொழிலாளா் சங்கத் தலைவா் சண்முகம், தம்மம்பட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளா் சிவா கணேசன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் வெங்கடாசலம், மணி, ஆட்டோ சங்க நிா்வாகி ரவி மற்றும் வாகனப் பராமரிப்புத் தொழிலாளா்கள், சுருட்டு, விவசாயத் தொழிலாளா்கள் என 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வு, நீட் தோ்வு ஆகியவற்றை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...