தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடந்த நாய்களுக்கான வெறி நோய்த் தடுப்பூசி முகாமில் 250 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
உலக ஜூனோ சிஸ் ( உலக விலங்கியல் நாள்) தினத்தை முன்னிட்டு, தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் வெறிநோய்த் தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா். அரசு கால்நடை மருத்துவா்கள் செந்தில்குமாா், ராஜ்மோகன், பன்னீா்செல்வம், கோகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் விஜய் சந்திரன் முகாமை தொடக்கிவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.