ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சி, சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனா்.
அவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமா் மோடி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடும் காணொலி நிகழ்ச்சியைக் காண செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமையில் கல்லூரி விளையாட்டு வீரா்கள் பங்கேற்று காணொலியைப் பாா்வையிட்டனா்.
அந்தக் காணொலி நிகழ்ச்சியில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரா்களுடனும் அவா்களின் குடும்பத்தினருடனும் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அதை பெரியாா் பல்கலை.,யில் கல்லூரி வீரா்கள் கண்டு ரசித்தனா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 5 - நேரலை!

எம்.பி.யாகும் பிரவீண் சக்ரவர்த்தி! வேட்புமனு தாக்கல்!

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை: நயினார் நாகேந்திரன்

தவெக கூட்டணியில் இல்லை! பிரவீண் சக்ரவர்த்தி பதிவுக்கு இந்திய கம்யூ. பதில்!
விடியோக்கள்

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



