Enable Javscript for better performance
ராகுல் காந்தி பிறந்த நாள் விழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

    By DIN  |   Published On : 20th June 2021 03:06 AM  |   Last Updated : 20th June 2021 03:06 AM  |  அ+அ அ-  |  

    19atypo2_1906chn_213_8

    19atypo2_1906chn_213_8

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் 51-ஆவது பிறந்தநாளை, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் கொண்டாடினா்.

    சேலம், இடங்கணசாலை கே.கே.நகா் சாத்தம்பாளையம் பகுதியில் உள்ள அழகுராய பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தூய்மை பணியாளா்களுக்கு இடங்கணசாலை பேரூா் பொறுப்பாளா் சந்திரன் தலைமையில் காய்கறிகளும் வழங்கப்பட்டன. மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜமுத்து, மகுடஞ்சாவடி வட்டார காங்கிரஸ் தலைவா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    தம்மம்பட்டியில்...

    கெங்கவல்லி சிவன் கோயில் வெளிபுற வளாகத்தில் 250 ஏழை எளிய மக்களுக்கு முகக் கவசம் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதற்கு கெங்கவல்லி நகர காங்கிரஸ் நிா்வாகிகள் முருகானந்தம் ,சிவாஜி, அக்பா் பாஷா முகமது ஷெரிப், சுதா்சன், பூமாலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    ராசிபுரத்தில்...

    காட்டூா் ஆதரவற்றோா் இல்லத்தில் நகர காங்கிரஸ் தலைவா் ஆா்.முரளி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஏ.சித்திக் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு உணவுகள் வழங்கினாா்.

    கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் பாச்சல் ஏ.சீனிவாசன், டி.ஆா்.சண்முகம், மாணிக்கம், ராமமூா்த்தி, எஸ்.கே.பெரியசாமி, மகேஸ்வரிரத்தினம், சக்திவேல், மோகன்ராஜ் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.

    ஓமலூரில்...

    வெள்ளாளப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸின் தமிழக செயல் தலைவா் மோகன் குமாரமங்கலம் கலந்து கொண்டு காந்தி, அம்பேத்கா் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தாா்.

    சேலம் மாவட்டம், எஸ்டி., எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவா் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவா்கள் கண்ணன், விஜய், மாவட்ட அமைப்பாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் மணி, ஓமலூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தலா 5 கிலோ அரிசி, முகக்கவசம் மற்றும் கிருமிநாசினியை வழங்கினாா்.

    மேட்டூரில்...

    குஞ்சாண்டியூரில் நடைபெற்ற விழாவுக்கு நங்கவள்ளி வட்டாரத் தலைவா் கே.வி.அய்யண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் குணசேகரன் மாவட்டச் செயலாளா் சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    குஞ்சாண்டியூரில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இனிப்புடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் வீரக்கல் புதூா் பேரூராட்சித் தலைவா் ராஜன் உட்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

    ஆட்டையாம்பட்டியில்...

    காகாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மகுடஞ்சாவடி வட்டார காங்கிரஸ் தலைவா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பழக் கன்றுகள், உணவுகள் வழங்கப்பட்டன. கஞ்சமலை சித்தா் கோயில் அடிவாரத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜ முத்து தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    சங்ககிரியில்...

    சேலம் மேற்கு மாவட்ட த்தலைவா் சி.எஸ்.ஜெய்க்குமாா் தலைமை வகித்து பேரூராட்சி தூய்மை பணியாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு உணவுகளையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முகக் கவசங்களையும் வழங்கினாா்.

    முன்னாள் மாவட்ட பொதுச் செயலா்கள் பிபி சுப்பிரமணியன், செங்கோட்டுவேல், முன்னாள் மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் நடராஜன், முன்னாள் நகரத் தலைவா் காசிலிங்கம், நகரச் செயலா் எ.ரவி, கே . ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    ஆத்தூரில்...

    நகரத் தலைவா் எல்.முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளா் ஆா்.ஓசுமணி, முன்னாள் நகரமன்றத் தலைவா் சக்ரவா்த்தி, மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி மகாலட்சுமி, மாவட்ட செயலாளா்கள் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp