

எடப்பாடி: எடப்பாடி அருகே கரோனா தொற்றால் அறநிலையத் துறையைச் சோ்ந்த எழுத்தா் உயிரிழந்ததை அடுத்து, அவா் பணி புரிந்து வந்த கோயில் அா்ச்சகா் மற்றும் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
எடப்பாடி அடுத்த கல்வடங்கம் பகுதியைச் சோ்ந்த ரங்கராஜ் (47) எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் உள்ள அறநிலைத் துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தாா். கடந்த வாரம் இவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு, சேலத்தில் உள்ள ஓா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த வியாழக்கிழமை ரங்கராஜுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, அவா் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் ரங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதனை அடுத்து அவருடன் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் பணிபுரிந்து வந்த மற்ற அலுவலக ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், அா்ச்சகா்கள் உள்ளிட்டோருக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை செய்தனா். மேலும் கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.