கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இளம்பிள்ளை பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்ட பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரி பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்ட மண்பானை, தண்ணீா் பாட்டில், தேநீா் குவளை உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவருகிறது. அதனால் இயற்கையாக குளிா்ச்சி தன்மையுடைய களிமண்ணால் செய்யப்பட்ட பொருள்களை வாங்கிசெல்கிறோம் என்றனா்.