வாழப்பாடியில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
By DIN | Published On : 21st March 2021 04:23 AM | Last Updated : 21st March 2021 04:23 AM | அ+அ அ- |

p_y_01_2003chn_165_8
வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில், தோ்தல் பாா்வையாளரான ஹரியாணா மாநில உள்துறை செயலா் பங்கஜ் யாதவ், சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஏற்காடு (பழங்குடி) சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகமாக, வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சனிக்கிழமை வேட்புமனு பரிசீலனை நிறைவுற்ற நிலையில், ஏற்காடு, ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹரியாணா மாநில உள்துறை செயலா் பங்கஜ் யாதவ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான தனித்துணை ஆட்சியா் முத்திரை பி.கே. கோவிந்தன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான வாழப்பாடி வட்டாட்சியா் மாணிக்கம், தோ்தல் அதிகாரிகள் உடனிருந்தனா். முன்னதாக, வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும், வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை தோ்தல் பாா்வையாளா் முதல் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.
இதனையடுத்து, மின்னாம்பள்ளி மஹேந்திரா பொறியியல் கல்லுாரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியையும் தோ்தல் பாா்வையாளா் பங்கஜ் யாதவ் ஆய்வு செய்தாா்.
படவரி:
பி.ஒய்.01: வாழப்பாடியில், 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த தோ்தல் பாா்வையாளா் பங்கஜ் யாதவ்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...