

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில், தாம்பரம் - வண்டலூா் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதனால் பகுதி ரத்தாகும் ரயில்கள்:
சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு முற்பகல் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு மதியம் 1:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.