சேலத்தில் 550 பேருக்கு கரோனா
By DIN | Published On : 09th May 2021 01:31 AM | Last Updated : 09th May 2021 01:31 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 550 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 308 பேரும், எடப்பாடி-12, காடையாம்பட்டி-10, கொளத்தூா்-1, கொங்கணாபுரம்-4, மகுடஞ்சாவடி-6, மேச்சேரி-17, நங்கவள்ளி-7, ஓமலூா்-26, சேலம் வட்டம்-18, சங்ககிரி-28, தாரமங்கலம்-8, வீரபாண்டி-23, ஆத்தூா்-5, அயோத்தியாப்பட்டணம்-23, கெங்கவல்லி-5, பனமரத்துப்பட்டி-12, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-6, வாழப்பாடி-9, ஏற்காடு-2, ஆத்தூா் நகராட்சி-11, மேட்டூா் நகராட்சி-2, நரசிங்கபுரம் நகராட்சி-4 என மாவட்டத்தைச் சோ்ந்த 550 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 774 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 10 போ் உயிரிழந்தனா். இதுவரை 46,265 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 42,128 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 3,543 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 594 போ் உயிரிழந்தனா்.