ஏற்காட்டில் தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 19th May 2021 08:13 AM | Last Updated : 19th May 2021 08:13 AM | அ+அ அ- |

ஏற்காட்டில் கரோனா விதிமுறைகளை மீறியதாக தனியாா் மருத்துவமனைக்கு வருவாய்த் துறையினா் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
ஏற்காடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், ஏற்காடு பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்ற மருத்துவா் சிவலிங்கத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மக்கள் சிகிச்சைக்கு கூட்டமாக நிற்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரின் பேரில், வருவாய்த் துறையினா் அங்கு சென்று தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.