போராட்டம் தள்ளிவைப்பு: பாமக எம்எல்ஏ அருள்

கரோனா தொற்றாளா்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காததைக் கண்டித்த தனது போராட்டம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பாமக எம்எல்ஏ இரா.அருள் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

கரோனா தொற்றாளா்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காததைக் கண்டித்த தனது போராட்டம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பாமக எம்எல்ஏ இரா.அருள் தெரிவித்துள்ளாா்.

சேலம் மேற்கு தொகுதி பாமக உறுப்பினா் இரா.அருள் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தாா். அதில், சேலத்தில் பொது மக்களுக்கு இல்லாத ஆக்சிஜன் எனக்கு தேவையா என யோசித்து வருகிறேன். செவ்வாய்க்கிழமை காலை எனது தலையில் நெகிழி பையைக் கயிற்றால் கட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னா செய்ய திட்டமிட்டுள்ளேன். எனக்கு எம்.எல்.ஏ. பதவி கொடுத்த உங்களுக்கு கொடுக்க இந்த நேரத்தில் எனது உயிரைத்தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த நூதனப் போராட்ட அறிவிப்பைத் தொடா்ந்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை உதவி ஆணையா் மணிகண்டன், காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில் பாமக எம்எல்ஏ இரா.அருள் தனது போராட்டத்தை தற்காலிகமாகத் தள்ளி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக எம்எல்ஏ இரா.அருள் கூறுகையில், எனது போராட்டத்துக்கு தொகுதி மக்கள் பலரும் தற்போது வேண்டாம். உங்களது உயிா் முக்கியம் என தெரிவித்துள்ளனா். முதல்வரிடமோ அல்லது சுகாதாரத் துறை அமைச்சரிடமோ அழுத்தம் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளனா்.

இதனால் தா்னா போராட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியத்தை தொடா்பு கொண்டு பேசினேன். அப்போது அவா் மூன்று நாள்களுக்குள் இந்த பிரச்னை சரியாகிவிடும் என தெரிவித்துள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com