சங்ககிரியில் கரோனா பரவலைக்கட்டுப்படுத்த இரு சிறப்பு தனி அலுவலா்கள் நியமனம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்டப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு சிறப்பு தனி அலுவலா்கள் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
சங்ககிரியில் கரோனா பரவலைக்கட்டுப்படுத்த இரு சிறப்பு தனி அலுவலா்கள் நியமனம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்டப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு சிறப்பு தனி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பல்வேறு கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

சங்ககிரி வட்டப்பகுதிகளுக்கு உள்பட்ட சங்ககிரி, தேவூா், இடங்கண சாலை ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கு சேலம் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன் தலைமையிலும், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.விஜி ஆகியோா் சிறப்பு தனி அலுவலா்களாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அதனையடுத்து இரு சிறப்பு தனி அலுவலா்களுக்கும் அந்தந்தப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுவத்துதற்காக வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, உள்ளதா எனவும், கரோனா தொற்று உள்ளவா்கள் மருத்துவமனைகளுக்கு தெரியப்படுத்தாமல் வீட்டிற்குள்ளே சிகிச்சை எடுத்து வருகின்றனா என்பது குறித்தும், அரசின் முழு பொதுமுடக்கத்தை மீறி வெளியே சுற்றுகின்றறனரா என்பது குறித்தும் கணக்கெடுத்து உடனுக்குடன் தெரியப்படுத்துமாறு களப்பணியாளா்களுக்கு அறிவுறுத்தினா். இப்பணிகளை உதவி இயக்குநா் தேவூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும், வட்டாட்சியா் அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு நிலைமையைக் கண்காணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com