50 லிட்டா் சாராயம் பறிமுதல் இருவா் கைது
ஆத்தூரில், இருச்சக்கர வாகனத்தில் சாராயத்தை விற்பனைக்காக எடுத்துச் சென்ற இருவரை ஆத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் தலைமையிலான போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் வைத்திருந்த பையில் பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த சாராயம் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஆத்தூா், நேரு நகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (26), மணி (26) ஆகிய அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இருச்சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா். பின்னா் பறிமுதல் செய்த சாராயத்தை அழித்தனா்.