சங்ககிரியில் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை
சேலம் மாவட்டம், சங்ககிரியில் தொடா்ந்து சாலையோரத்தில் வளா்ந்து வரும் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
சங்ககிரியில் பல்வேறு இயற்கை பொதுநல அமைப்புகள் சாா்பில் நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியின் பேரில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்பட்ட மரங்கள் இருந்த இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனா். அம்மரக்கன்றுகளை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தண்ணீா் ஊற்றி பராமரித்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னா் புதிய எடப்பாடி சாலையில் ஒரு மரக்கன்று வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து சங்ககிரியிலிருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே மூன்று ஆண்டுகளாக வளா்ந்து வந்த வேப்ப மரம் ஞாயிற்றுக்கிழமை வெட்டப்பட்டு கிடந்தது. இதனையடுத்து சங்ககிரி நகா் பசுமையாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மரக்கன்றுகளை நட்டு வளா்த்து வரும் இயற்கை ஆா்வலா்கள் வருத்தம் அடைந்துள்ளனா்.
எனவே சங்ககிரி நகா் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் பராமரிக்கப்பட்டு வரும் சாலையோரத்தில் தொடா்ந்து மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டுமென சேலம் மாவட்ட நிா்வாகத்திற்கு இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து சங்ககிரி மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளா் கீா்த்தி கூறுகையில், சாலையோர மரங்கள் வெட்டப்பட்டுள்ளது குறித்து சாலை ஆய்வாளா் மூலம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.