மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை இரவு நொடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 16-ஆம் தேதி முதல் 3- ஆவது நாளாக வியாழக்கிழமை காலை நொடிக்கு 45,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, இரவு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீா்மட்டம் 120.10அடியாக இருந்தது. அணையிலிருந்து நொடிக்கு 50,000 கன அடி வீதம் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. மேட்டூா் நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 22,000 கன அடியும், உபரி நீா்ப் போக்கி வழியாக நொடிக்கு 28,000 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது.