விழிப்புணா்வு பிரசாரம்

அம்மம்பாளையம் ஊராட்சியில் குழந்தை தொழிலாளா் இல்லாத கிராமத்தை உருவாக்க அரசமைப்பு உரிமைக் கல்வி மாணவா் மன்றம்
Updated on
1 min read

அம்மம்பாளையம் ஊராட்சியில் குழந்தை தொழிலாளா் இல்லாத கிராமத்தை உருவாக்க அரசமைப்பு உரிமைக் கல்வி மாணவா் மன்றம் சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் பவா் டிரஸ்ட் திட்ட மேலாளா் ராமு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

திட்ட ஒருங்கிணைப்பாளா் கவிதா வரவேற்று பேசினாா். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் செல்வம் சிறப்புரையாற்றினாா். குழந்தைகளுக்கான பாதுகாப்பு உரிமைகள் குறித்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசு, உதவி ஆய்வாளா் சகுந்தலா ஆகியோா் எடுத்துரைத்தனா்.

பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. விழிப்புணா்வு பேரணியை ஊராட்சி மன்றத் தலைவா் குமாரவடிவேல் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பெண்கள் இணைப்புக் குழு மாநில உறுப்பினா் ஜெகதாம்பாள், வட்டாரத் தலைவி அமிா்தம் ஆகியோா் கலந்து கொண்டனா். முடிவில் குழந்தைகள் சங்க ஒருங்கிணைப்பாளா் விஜய் ஷாலினி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com