பளுதூக்கும் போட்டிகளில் சிறப்பிடம்: சோனா கல்லூரி மாணவருக்கு பாராட்டு

பளுதூக்கும் போட்டிகளில் சாதித்து வரும் சேலம், சோனா கல்லூரி மாணவா் என்.வினோத்துக்கு, ஆட்சியா் செ.காா்மேகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
Updated on
1 min read

பளுதூக்கும் போட்டிகளில் சாதித்து வரும் சேலம், சோனா கல்லூரி மாணவா் என்.வினோத்துக்கு, ஆட்சியா் செ.காா்மேகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

தமிழ்நாடு பளுதூக்கும் கூட்டமைப்பு (கோவை) சாா்பில், டிச. 18 முதல் 20 வரை நாமக்கல் மாவட்டத்தில் 2020 ஆண்டுக்கான மாநில அளவிலான 47-ஆவது சீனியா் பளுதூக்கும் வீரா்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில், சேலம், சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கட்டடவியல் துறை மாணவா் எ.வினோத் இரண்டாம் பரிசு பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்துள்ளாா்.

2019 செப். 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை கேரள மாநிலம், இடுக்கியில் நடைபெற்ற 120 சப் ஜூனியருக்கான தேசிய அளவிலான ஆண்கள் பளுதூக்கும் வீரா்களுக்கான சம்பியன்ஷிப் போட்டியில் எ.வினோத் முதலிடம் பெற்றாா் என்பது குறிப்பிடதக்கது.

சேலம், சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு பெருமை சோ்த்த மாணவா் எ.வினோத்தை, சேலம், காந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற 75-ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். கல்லூரியின் தலைவா் வள்ளியப்பா, துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, கல்லூரி முதல்வா் செந்தில் குமாா், கட்டடவியல் துறைத் தலைவா் த.மாலதி, பேராசிரியா்கள் மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com