காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22 1875 கன அடியிலிருந்து 22,076கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கன அடியாக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பரவலாக மழை பெய்து வருகிறது. கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு கன அடி வீதம் வந்து 22875கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 22,076கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- பிரிட்டன்: ‘நாடாளுமன்றத்துக்கு ஜீன்ஸ் அணிந்து வரக் கூடாது’
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று காலை 71.10 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 72.69அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு35.05 டி.எம்.சியாக இருந்தது.