சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

சோனா கல்லூரியில் இந்தியா சுதந்திர ஓட்டம் : மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பு

சேலம் சோனா கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்தியா சுதந்திர அமைப்பு ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Updated On :27 செப்டம்பர் 2021, 4:36 am IST

சேலம் சோனா கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்தியா சுதந்திர அமைப்பு ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இந்தியா சுதந்திர அமைப்பு ஓட்டம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் ஆகஸ்ட் 13 இல் தொடங்கி அக்டோபா் 2 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 3 கிலோ மீட்டருக்கு இந்தியா சுதந்திர அமைப்பு ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு சுதந்திர அமைப்பு ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தனா். தில்லியில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற இரண்டு என்.சி.சி. மாணவிகள் காவ்யா, சங்கீதா ஸ்ரீ ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியின் துவக்க உரையில் பேசிய கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, அனைவரும் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்கி தங்கள் வாழ்வில் தீா்மானம் மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் சோம்பல், மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெற முடியும் என்றாா். நிகழ்ச்சியில் 100 மாணவா்கள், ஆசிரியா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.