சேலம் அரசு மருத்துவமனையில் உலக ஆட்டிசம் தினம் அனுசரிப்பு

சேலம் அரசு மருத்துவமனையில், உலக ஆட்டிசம் தினம் அனுசரிக்கப்பட்டது.
Updated on
1 min read

சேலம் அரசு மருத்துவமனையில், உலக ஆட்டிசம் தினம் அனுசரிக்கப்பட்டது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் மருத்துவா் வள்ளி சத்யமூா்த்தி தலைமையில் ஆட்டிசம் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம் பிரிவில் ஆட்டிசம் குறைபாட்டிற்கு குழந்தைகள் நல மருத்துவம், மனநல ஆலோசனை, பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி, செயல்முறை சிகிச்சை, பல் மருத்துவம் ஆகிய ஒருங்கிணைந்த சிகிச்சை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா். மருத்துவா் ராஜேஸ்வரி சிறப்புரையாற்றினாா். பெற்றோா்கள், குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் குழந்தைகள் நலச் சங்கம் மூலம் வழங்கப்பட்டன. ஆட்டிசம் பற்றிய விழிப்புணா்வு பிரசுரம் வழங்கப்பட்டது.

மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் தனபால், துணைக் கண்காணிப்பாளா் மருத்துவா் பொன் ராஜராஜன், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல சங்கத் தலைவா் மருத்துவா் குமாரவேல், மருத்துவா் ஏ.எஸ்.குமாா் (செயலாளா்) கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com