நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உலக புத்தக தினம்: துறையூர் கிளை நூலக உறுப்பினர் சேர்க்கை

துறையூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி 1000 உறுப்பினர்கள் மற்றும் 100 புரவலர்கள் சேர்க்கை

News image

துறையூர் கிளை நூலக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக 15வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் செல்வராணி கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பள்ளி மாணவி ஒருவரிடம் வழங்குகிறார்.

Updated On :23 ஏப்ரல் 2022, 5:14 pm IST

துறையூர்: துறையூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி 1000 உறுப்பினர்கள் மற்றும் 100 புரவலர்கள் சேர்க்கை மற்றும் புத்தக தினம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. 

துறையூர் நகர 15-வது வார்டில் வாசகர் வட்ட தலைவர் தி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. நூலகர் பெ.பாலசுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தை துறையூர் நகர்மன்ற தலைவி ம.செல்வராணி பெற்றுக் கொண்டார். 15-வது வார்டு உறுப்பினர் ந.புவனேஸ்வரி பள்ளி மாணவ, மாணவியர்கள் 150 பேரிடம் உறுப்பினர் அட்டையையும், அதற்கான சேர்க்கை கட்டணத்தையும் மற்றும் நூலக வளர்ச்சிக்காக ரூ.1000 நன்கொடையும் நூலகத்துறையிடமும் வழங்கினார்.

நிகழ்வில் குளோபல் நேச்சுரல் பவுண்டேசன் கி.நவீன், வாசகர் வட்ட நிர்வாகிகள் வி.வேணுகோபால், ந.தில்லைநாயகம் உள்ளிட்டோரும், வார்டு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவில் நூலகர் சி.என். சாந்தி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.