கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!

சேலம் காவேரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஆகஸ்ட் 2022, 9:42 am

DIN

சேலம்: சேலம் காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் மீண்டும் அதிக அளவில் வெளியேற்றப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் பத்திரமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையானது தனது முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில்,  தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. 

தற்போதைய  நிலவரப்படி, இன்று  அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள நீரின் அளவானது 1.40 இலட்சம் கன அடியாக உள்ளது. மேலும், இது 1.60 இலட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.