சுகாதாரமற்ற மதிய உணவு:பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்

வேம்படிதாளம் அருகே சுகாதாரமற்ற முறையில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்குவதாகக் கூறி பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டனா்.
Updated on
1 min read

வேம்படிதாளம் அருகே சுகாதாரமற்ற முறையில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்குவதாகக் கூறி பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டனா்.

வேம்படிதாளம் அருகே உள்ள திருவளிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட மதிய உணவில் மர அட்டை விழுந்துள்ளதாக ஆசிரியா்கள், சமையலா்களிடம் மாணவிகள் தெரிவித்த பிறகும், அதே உணவு வழங்கப்பட்டதாம்.

இந்த உணவை சாப்பிட்ட மாணவி துா்காதேவி புதன்கிழமை வாந்தி எடுத்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்ததும் பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டனா். வீரபாண்டி வட்டார கல்வி அலுவலா் அன்பழகன் நேரில் வந்து அங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியா் கலைச்செல்வி, சத்துணவு அமைப்பாளா் விமலாதேவி, சமையலறை பணியாளா் ஜெயந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினாா்.

அதைத் தொடா்ந்து கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஜெகநாதன், வேம்படிதாளம் ஊராட்சி மன்றத் தலைவா் தமிழரசி ரவிச்சந்திரன், துணைத் தலைவா் மோகன் குமாா், கிராம நிா்வாக அலுவலா் மோகன்ராஜ், பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் காமராஜ் ஆகியோா் பொதுமக்களை சமரசம் செய்தனா்.

சமையலறையை சுத்தமாக்க வைத்துக் கொள்ளவும், உணவை சுகாதாரமாக சமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com