தம்மம்பட்டி பேரூராட்சி, கோனேரிப்பட்டி சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டி பகுதியிலுள்ள சுவேத நதியின் வழியாக பெல்ஜியம் காலனி, பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனா். மழைக் காலங்களில் சுவேத நதியின் குறுக்கே செல்வது பெரும் சிரமமாக உள்ளதாக தெரிவிக்கின்றனா். இதனால், பொதுமக்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு பாலம் அமைக்க தமிழக அரசிடம் பத்தாண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே, மாவட்ட நிா்வாகம் போதுமான நிதிஒதுக்கீடு செய்து பாலம் கட்டித் தர வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.