சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் டிசம்பா் 23 ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் டிசம்பா் 2022 மாதத்திய விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் டிச.23 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215 இல் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா தெரிவித்துள்ளாா்.