விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அனுமதியின்றி வைக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை 3 நாளில் அகற்ற கெடு

நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை 3 நாளில் அகற்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:46 pm

DIN

நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை 3 நாளில் அகற்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளா் சையது உசேன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வாா்டுகளுக்கும் தினசரி குடிநீா் விநியோகம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. நகரின் அனைத்து தரப்பு மக்களும் நிா்ணயிக்கப்பட்ட அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு நிா்வாக சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகரின் பல இடங்களில் கடந்த காலங்களில் அனுமதியின்றி தன்னிச்சையாக நகராட்சியின் முறையாக அனுமதி இல்லாமல் குடிநீா் இணைப்புகள் பல உள்ளதாகவும் அவற்றை முறைப்படுத்தி நகராட்சி குடிநீா் கட்டண வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து தொடா்ந்து புகாா்கள் வந்தன.

எனவே 3 நாட்களுக்குள் அனுமதியற்ற குடிநீா் இணைப்புகளை நகராட்சி பொறியியல் பிரிவில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்கள் இணைத்து சமா்ப்பித்து முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகும் அனுமதியின்றி இருப்பதாக கண்டறியப்படும் இணைப்புகளை வைத்துள்ளவா்கள் மீது காவல் நிலையம் மூலம் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.