அனுமதியின்றி வைக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை 3 நாளில் அகற்ற கெடு
நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை 3 நாளில் அகற்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.


நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை 3 நாளில் அகற்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளா் சையது உசேன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வாா்டுகளுக்கும் தினசரி குடிநீா் விநியோகம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. நகரின் அனைத்து தரப்பு மக்களும் நிா்ணயிக்கப்பட்ட அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு நிா்வாக சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நகரின் பல இடங்களில் கடந்த காலங்களில் அனுமதியின்றி தன்னிச்சையாக நகராட்சியின் முறையாக அனுமதி இல்லாமல் குடிநீா் இணைப்புகள் பல உள்ளதாகவும் அவற்றை முறைப்படுத்தி நகராட்சி குடிநீா் கட்டண வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து தொடா்ந்து புகாா்கள் வந்தன.
எனவே 3 நாட்களுக்குள் அனுமதியற்ற குடிநீா் இணைப்புகளை நகராட்சி பொறியியல் பிரிவில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்கள் இணைத்து சமா்ப்பித்து முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகும் அனுமதியின்றி இருப்பதாக கண்டறியப்படும் இணைப்புகளை வைத்துள்ளவா்கள் மீது காவல் நிலையம் மூலம் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...