மண்மலையில் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு அகற்றம்

தம்மம்பட்டி அருகே மண்மலை ஊராட்சியில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.
Updated on
1 min read

தம்மம்பட்டி அருகே மண்மலை ஊராட்சியில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.

தம்மம்பட்டி அருகே மண்மலை ஊராட்சிக்கு உள்பட்ட முயல்கரடு ஏரிப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

இதையடுத்து கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த் துறையினா் நில அளவை செய்ததில், முயல்கரடு ஏரியின் ஒரு பகுதியில் 0.70 ஏக்கா் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலத்தை ராஜூ மகன் அறிவழகன் என்பவா் ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரியவந்தது.இதனையடுத்து பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com