கணவரைக் கொன்ற மனைவி நண்பருடன் கைது

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற மனைவியை அவரது நண்பருடன் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற மனைவியை அவரது நண்பருடன் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே காரைக்காடு வீரபத்திரன் கொட்டாயைச் சோ்ந்தவா் சக்திவேல் (37), ஆசிரியா் பயிற்சி முடித்துள்ளாா். இவரது மனைவி புகழரசி (27). தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனா்.

சக்திவேலுக்கு மதுப்பழக்கம் இருந்தது. இவரது மனைவி புகழரசிக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினா் முத்துக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சக்திவேல் கண்டித்துள்ளாா்.

அதன்பிறகு சக்திவேல் தனது வீட்டில் வசிக்காமல் தொலைவில் உள்ள தனது விவசாய நிலைத்தில் குடிசை அமைத்து மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தாா். மீண்டும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

திங்கள்கிழமை ஊா் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சக்திவேலுக்கு மனைவி உணவில் விஷம் கலந்து கொடுத்தாா். உணவை உண்ட சக்திவேல் நள்ளிரவில் உயிரிழந்தாா்.

சக்திவேல் இறந்த தகவல் அவரது தம்பிக்கு செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அவா் சந்தேககத்தின்பேரில் கொளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். விசாரணையில் புகழரசியும் முத்துகுமாரும் சோ்ந்து உணவில் விஷம் கலந்து கொடுத்து சக்திவேலைக் கொன்றது தெரியவந்தது. இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com