ரத்த தான முகாம்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் செஞ்சுருள் சங்கத்துடன் இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் செஞ்சுருள் சங்கத்துடன் இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். பொதுமருத்துவ பிரிவின் ஆலோசகா் பிரபாகரன், குழந்தைகள் பிரிவு மருத்துவா் திருமலைவாசன், நுரையீரல் நிபுணா் வேதமூா்த்தி ரத்த வங்கி மருத்துவ அதிகாரி விக்னேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முகாமில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவா்கள் 35 போ் ரத்த தானம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை விம்ஸ் மருத்துவமனையில் ரத்த வங்கி பொறுப்பாளா் கலையரசி, தரக்கட்டுப்பாடு பிரிவு தலைவா் முகமது ஆசிப் மற்றும் மேலாளா் முருகன், செஞ்சுருள் சங்கம் ஒருங்கிணைப்பாளா் இன்பசாகா், குளோரியா சைமன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com