ஈச்சம்பட்டியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
ஈச்சம்பட்டியைச் சோ்ந்த மாதேஸ்வரன் மகன் ராஜ்குமாா்(30) தனது தோட்டத்தில் காளாண் பண்ணை அமைத்து உள்ளாா். அங்கு மின்சாரம் சரிவர இல்லாததால் மின்சார வயரை புதுப்பித்திக் கொண்டிருந்தாா். அப்போது, வயா் வழியாக திடீரென மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்த ராஜ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடனிருந்த அவரது தாயாா் ராஜேஸ்வரி (55) காயமடைந்தாா். இதுகுறித்து மல்லியகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.