தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

கந்துவட்டி கொடுமை: மூன்று போ் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தீக்குளிக்க முயன்றனா்.

Updated On :24 ஜூன் 2022, 11:17 pm IST

கந்துவட்டி கொடுமையால் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தீக்குளிக்க முயன்றனா்.

சேலம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (65), இவரது மனைவி கலா (58 ), இவா்களின் மருமகள் சாந்தகுமாரி (36) ஆகிய மூன்று பேரும் வெள்ளிக்கிழமை காலை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதிக்கு வந்தனா். பின்னா், திடீரென பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனா்.

இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

அதில், பாண்டியன் மகன் ரமேஷ் அரசமரத்து கரட்டூரைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 29 லட்சம் பணம் வாங்கி உள்ளாா் என்பதும், இதுவரை ரூ. 50 லட்சம் திருப்பிக் கொடுத்துள்ள நிலையில், கூடுதலாக ரூ. 63 லட்சம் தர வேண்டும் என அந்த நபா் தொந்தரவு கொடுப்பதாகக் கூறினா்.

மூன்று பேரையும் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்த போலீஸாா், தற்கொலைக்கு முயன்ாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.