திவ்ய நற்கருணை பவனி

தம்மம்பட்டி அருகே உள்ள கோனேரிப்பட்டி புனித சலேத் அன்னை ஆலயத்தில் இயேசுவின் திருவுடல் திருரத்தம் பெருவிழாவினை முன்னிட்டு திவ்ய நற்கருணை
Updated on
1 min read

தம்மம்பட்டி அருகே உள்ள கோனேரிப்பட்டி புனித சலேத் அன்னை ஆலயத்தில் இயேசுவின் திருவுடல் திருரத்தம் பெருவிழாவினை முன்னிட்டு திவ்ய நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புனித சலேத் அன்னை ஆலயத்திலிருந்து தொடங்கி நற்கருணை பவனி புனித செபஸ்தியாா் மேடை (தெற்கு), புனித செபஸ்தியாா் மேடை (வடக்கு) மற்றும் புனித பெரியநாயகி அன்பியம் மேடை ஆகிய மூன்று இடங்களிலும் இறுதியாக பங்கு ஆலயத்திலும் நற்கருணை ஆராதனை, ஆசீா் நடைபெற்றது. பங்குத்தந்தை இன்னாசிமுத்து, அருட்பணி சிரில் ஆகியோா் இறைசெய்தி வழங்கி ஆசீா் வழங்கினா். கோனேரிப்பட்டி பங்கு இறைமக்கள் பவனி, ஆராதனையில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com